News October 19, 2025
குமரியில் முன்னாள் அமைச்சர் உட்பட 25 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே குறும்பனை பஸ் நிலையத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்குவதாக காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டது. அதில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருமுனை பிரச்சாரம் செய்ததாகவும், காவல்துறை கலைந்து போக கூறியும் போகாததால் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உட்பட 25 பேர் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 7, 2025
குமரியில் கஞ்சா வழக்கில் 465 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 465 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று தெரிவித்தனர். கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
News December 7, 2025
குமரி: அரசு வேலை.. ரூ.23 லட்சம் மோசடி! தாய் மகன் மீது வழக்கு

நாகர்கோவிலை சேர்ந்த ஜீவா நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், தனக்கும் சிலருக்கும் கீதா மற்றும் அவரது மகன் ஆகியோர் சேர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நீதிமன்றம் உத்தரவின் பேரில் வடசேரி போலீசார் 2 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
News December 6, 2025
குமரி: ஆயுதப்படை வளாகத்தில் முதிர்ந்த மரங்களை அகற்ற ஏலம்

குமரி காவல்துறை இன்று 06.12.2025 வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இடையூறாக மற்றும் முதிர்வுற்ற 19 மரங்களை வெட்டி அகற்ற நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் டிசம்பர் 10ம் தேதி காலை 9 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள ரூ.1000 கட்டி பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


