News April 17, 2024
குப்பை வண்டியில் மதுபானம் கடத்திய இருவர் கைது

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கேணிக்கரை போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த பட்டினம்காத்தான் ஊராட்சி குப்பை வண்டியை சோதனையிட்டனர். அதில் 60 மது பாட்டில்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் ஊராட்சி தற்காலிக பணியாளர்கள் சக்கரக்கோட்டை மேல சோத்தூரணி முனீஸ்வரன் (33), டிரைவர் மகாத்மா காந்தி நகர் மதன்ராஜ் (33) ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News November 12, 2025
ராம்நாடு: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

ராம்நாடு மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 12, 2025
ராம்நாடு: இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை, மண்டபம் ஒன்றிய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்குவதற்கான இலவச மருத்துவ முகாம் உச்சிப்புளி தொடக்கப்பள்ளியில் (நவ.13) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் 18 வயதிற்குட்பட்ட பார்வை, செவித்திறன், கை, கால் செயல்பாடு, மனவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளை பங்கேற்று பயன் பெறலாம்.
News November 12, 2025
ராம்நாடு: அழகு சாதனங்கள் தாயாரிக்கும் இலவச பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம், 8/59, C5 மாதவன் நகர் , பரமக்குடி பகுதியில் தமிழக அரசு சார்பில் இலவச மூலிகை பொருட்கள் அழகு சாதனங்கள் தாயாரிக்கும் பயிற்சி வருகின்ற டிசம்பர் 20, 21 மற்றும் 22 தேதிகளில் வழங்கப்பட உள்ளது. பயிற்சி நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தொடர்புக்கு 8531864866. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.


