News November 2, 2025
குடியாத்தம் அருகே வசமாக சிக்கிய திருடர்கள்!

குடியாத்தம் அருகே சேத்துவண்டை பகுதியில் டவுன் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த 2 பேரை விசாரித்தனர். அதில் அவர்கள் சென்னையை சேர்ந்த தாஸ் (30), சூர்யா (25) என்பதும், குடியாத்தம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
வேலூர்: லைசன்ஸ் இல்லையென்ற கவலை இனி இல்லை

வேலூரில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
வேலூர்: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 11, 2025
சபரிமலை சிறப்பு ரயில் காட்பாடி வழியாக இயக்கம்

சபரிமலை யாத்திரைக்காக தெலங்கானா மாநிலம் சார்லப்பள்ளியில் இருந்து கொல்லம் வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும். நவம்பர் 17 முதல் ஜனவரி 19 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் ரயில் இயக்கப்படும். திரும்பும் ரயில் புதன்கிழமைகளில் இயங்கும். டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


