News November 17, 2024

கீழையூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிரை அடுத்த அருந்தவன்புலத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (59). இவர் கீழையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் திடீரென காலை நெஞ்சு வலிப்பதாக தனது மனைவி அந்தோணி மேரியிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஒரத்தூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். அவருக்கு சக காவலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Similar News

News December 10, 2025

நாகை: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

நாகை மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News December 10, 2025

நாகை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு?

image

நாகை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. மேலும் w<>ww.msme<<>>online.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 10, 2025

நாகை: அரசு ஊழியர் தற்கொலை

image

திருக்குவளை அருகே முத்தரசபுரத்தில், நுகர்பொருள் வாணிபக் கழக பருவ கால உதவியாளர் கலைமணி (40) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தன் வீட்டில் கதவை பூட்டிக் கொண்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!