News August 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் தடை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மின்நகர், பத்தளப்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் நாளை (ஆக.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது. காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க..!
Similar News
News December 15, 2025
கிருஷ்ணகிரியில் வாகன ஏலம் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் வாகன ஏலம் அறிவிக்கப்பட்டது. மதுவிலக்கு அமல்பிரிவில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்த 73 வாகனங்கள், வரும் (டிச.23) காலை 10 மணியளவில் ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. மேலும், ஏலத்திற்கு வருவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாகனம் வாங்க விரும்புபவர்களுக்கு ஷேர்!
News December 15, 2025
கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 15, 2025
கிருஷ்ணகிரி முன்னாள் நகர் மன்ற தலைவர் அதிமுகவில் இணைந்தார்

கிருஷ்ணகிரி இன்று (டிச.15) முன்னாள் திமுக நகர்மன்ற செயலாளர் பரிதாநவாப் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள், மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


