News November 26, 2025
கிருஷ்ணகிரி: மலை அடிவாரத்தில் பெண் மர்மமரணம்!

பாகூர் அருகே மேல் சீனிவாசபுரத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் 100 நாள் திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை பணி முடிந்து வெளியே செல்வதாக சொல்லி சென்றுள்ளார், நெடுநேரம் ஆனா பின்னும் அவர் திரும்பாத நிலையில் அவரை தேடி வந்தனர். அப்போது மலையின் அடிவாரத்தில் கோவிந்தம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார், போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
கிருஷ்ணகிரி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
News January 24, 2026
ஓசூர் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதி பயங்கர விபத்து

ஒசூா் பத்தலப்பள்ளியில் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அடுத்தடுத்து 3 காா்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 3 காா்களும் சேதமடைந்தன. வாகன நெரிசலில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவா்களின் இடையே புகுந்து சென்றனா். ஒருமணி நேரத்துக்குப் பிறகு விபத்தில் சிக்கிய ஒரு காரை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது
News January 24, 2026
கிருஷ்ணகிரி: 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

கெலமங்கலம் அடுத்த யு.புரம் கிராமத்தை சேர்ந்த சுஸ்மிதா(15), 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு பள்ளிக்கு செல்லலாம் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜன-23 வீட்டில் தனியாக இருந்த சுஸ்மிதா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


