News September 28, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செ.28) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News November 18, 2025
கல்வி, திருமணம் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (நவ.17) நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பாக, தொழிலாளர் நலத்துறையில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.4 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் கல்வி, திருமண உதவித்தொகை காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் வழங்கினார்.
News November 18, 2025
கல்வி, திருமணம் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (நவ.17) நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பாக, தொழிலாளர் நலத்துறையில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.4 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் கல்வி, திருமண உதவித்தொகை காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் வழங்கினார்.
News November 18, 2025
கிருஷ்ணகிரி:பணம் வைத்த சீட்டாட்டம் 5பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெங்கடாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடியதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், ஊத்தங்கரை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கார்த்திகேயன், ஜீவா, அருள், சுரேஷ், முரளி ஆகிய ஐந்து பேரை கையும் களவுமாகப் பிடித்து (நவ.16) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5,300 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


