News August 22, 2024
காவிரி பிரச்னையில் விரைவில் ஒருமித்த கருத்து: தேவகவுடா

காவிரி பிரச்னை குறித்து இரு மாநிலங்களுக்கும் இடையே விரைவில் ஒருமித்த கருத்து ஏற்படும் என முன்னாள் PM தேவகவுடா கூறியுள்ளார். கர்நாடகாவில் 9 மாவட்ட மக்கள் தண்ணீருக்கு அவதிப்படுவதாகவும், பெங்களூருவில் 1.40 கோடி மக்கள் தண்ணீரின்றி சிரமப்படுவதாகவும் கூறினார். மேலும், தமிழ்நாட்டை ஆளும் கட்சிகளுக்கு இந்த பிரச்னை குறித்து தெரியும் என்றும், விரைவில் இதற்கு தீர்வு ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News November 8, 2025
திமுக தோற்றால் மா.செ. பதவி காலி: மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளில் திமுக வெல்லவில்லை என்றால் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் திமுக கட்டாயம் வெற்றிபெற வேண்டும். குறிப்பாக, அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி MLA-வாக உள்ள வேப்பனஹள்ளியில் இந்த முறை திமுக தோற்கக்கூடாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News November 8, 2025
அஜித் குமார் மரணம்… அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட் விடுத்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், டெல்லியில் இருந்து தடயவியல் பரிசோதனை முடிவுகள் வரவில்லை, அதனால்தான் தாமதம் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 3 வாரத்தில் பரிசோதனை முடிவுகளை வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News November 8, 2025
டாப் 10 மகிழ்ச்சியான நகரங்கள்.. நம்பர் 1 எது பாருங்க

ஆசியாவில் மிகவும் மகிழ்ச்சியான நகரம் எது தெரியுமா? நம்பர் 1 இடம் உங்களை ஆச்சரியப்படுத்தும். ஆசிய நகரங்களில் 18,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் டைம் அவுட் நடத்திய கணக்கெடுப்பின்படி, 2025-ம் ஆண்டிற்கான ஆசியாவின் டாப் 10 மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியிடப்பட்டுள்ளன. அவை என்னென்ன நகரங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT


