News August 23, 2025
காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு மரியாதை

சீர்காழி காவல் சரகம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு கட்டை பையில் ஒரு கைபேசி மற்றும் ரூ.5,100 பணமும் கிடந்துள்ளது. இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் காமராஜ் என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காணாமல் போன பொருள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு சீர்காழி காவல் நிலையம் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Similar News
News January 19, 2026
மயிலாடுதுறை: கஷ்டங்கள் நீங்க இங்கு போங்க!

மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் வைத்தீஸ்வரன் ஆலயம் உள்ளது. இங்கு சென்று மூலவரான சிவனை வழிபட்டு, அங்குள்ள செவ்வமுத்துக்குமரர் சன்னதியில் உள்ள முருகனை வழிபட்டால், தொழில் தொடங்கி விரக்தியில் இருப்பவர்களின் கஸ்டங்கள் நீங்கும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமென நம்பப்படுகிறது. உடனே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்து அவர்களது முன்னேற்றத்திற்கு நீங்களும் உதவுங்கள்.
News January 19, 2026
மயிலாடுதுறை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

மயிலாடுதுறை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 19, 2026
மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் நியமனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவரான வி.ஆர்.எஸ்.பானுசேகர் காங்கிரஸ் கமிட்டியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைமையால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தியாயடுத்து புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட தலைவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


