News April 23, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல். 23) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News November 15, 2025
பென்னாத்தூர்: வாக்காளர் படிவங்கள் திரும்ப பெரும் பணி

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பென்னாத்தூர் பேரூராட்சி கேசவபுரம் பள்ளிதெருவில் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்கள் திரும்பப்பெறும் பணிகளை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (நவ.15) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
News November 15, 2025
தனியார் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்த கலெக்டர்

காட்பாடி தனியார் பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (நவ.15 ) தொடங்கி வைத்தார்.தேர்வான வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, தனியார் பல்கலைக்கழக துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News November 15, 2025
வாக்காளர் படிவம் திரும்பப்பெறும் பணி கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமி இன்று (நவ.15) எண். 40. காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.ஜி.ராவ் நகர் பகுதியில் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை திரும்பப்பெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வாக்காளர் பதிவு அலுவலர் மாறன், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.


