News July 15, 2024

காலை சிற்றுண்டி திட்டத்தில் 23,028 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

image

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இட்டு முதல் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் 354 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 23,028 மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டத்தை மத்தளம்பாறை ஊராட்சி விவேகானந்தா நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் இன்று 15-ம் தேதி துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் காலை சிற்றுண்டியை சாப்பிட்டார்.

Similar News

News July 11, 2025

தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 18 அன்று காலை 10 – 2 மணி வரை நடைபெற உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் முகாமில் 8ம் வகுப்பு முதல் ITI, டிப்ளமோ, டிகிரி வரை கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633-213179 இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம். SHARE பண்ணுங்க..

News July 10, 2025

தென்காசி விவசாயிகளே: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

image

தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மானியத்தில் 40% மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகின்றன. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க உழவன் செயலி (Ulavan App) வழியாக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.மேலும் விரிவான தகவல்களைப் பெற, தென்காசி மாவட்டத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News July 10, 2025

குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்

image

தென்காசி மாவட்டத்தில் மிகவும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலம் என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர். மேலும் வருடத்திற்கு ஒருமுறை குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த வருடத்திற்கான சாரல் திருவிழா வருகின்ற ஜூலை 19ம் தேதி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!