News July 15, 2024
காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரகப் பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் எலவமலை பஞ்சாயத்துக்குட்பட்ட விருமாண்டபாளையத்தில் இன்று வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி, குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். இதில் எம்பி அந்தியூர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உட்பட பலர் பங்கேற்றனர்.
Similar News
News July 11, 2025
ஈரோடு: குரூப்-4 எழுத இது அவசியம்

➡️ ஈரோடு மாவட்டத்தில் நாளை(ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
ஈரோடு: 12th முடித்தால் கிராம வங்கியில் வேலை

தமிழகத்தில் NABARD வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில்( NABFINS) CSO( Customer Servive Officer) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை, 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 – 33 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், உங்களிடம் டூவீலர் இருப்பது அவசியமாகும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News July 11, 2025
ஈரோடு: ரேஷன் கார்டில் மாற்றமா..?

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் ஜூலை 12ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது. இதில் புதிய குடும்ப அட்டை கோருதல், நகல் குடும்பஅட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.