News January 9, 2025

காரைக்கால் மீனவர்கள் 10 பேர் கைது

image

காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமாக விசைப்படையில் பல்வேறு பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் இன்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News

News November 14, 2025

புதுவை: ஜிப்மரில் நேரம் நீட்டிப்பு

image

புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புறநோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ரத்த பரிசோதனை மையம் மற்றும் ரத்த வங்கியில் செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை மையம் ஆகியவற்றின் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் காலை 6.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 6.30 முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என தகவல்.

News November 14, 2025

புதுவை: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

image

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 14, 2025

புதுவை: பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

image

புதுவையில் போக்குவரத்து போலீசார் நேற்று கொசக்கடை தெரு, நேரு வீதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த 5 சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல், மதுபோதையில் வாகனங்கள் ஓட்டி வந்தவர்கள் என 250 பேருக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

error: Content is protected !!