News October 1, 2025

காரைக்காலில் நாளை ‘காந்தி ஜெயந்தி’ விழா

image

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை (02.10.2025) காலை 9 மணி அளவில் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காந்தி ஜெயந்தி’ விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 14, 2025

புதுவை: போதை பொருள் கடத்திய 2 பேர் கைது

image

புதுவை கரையாம்புத்தூரில், 65 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருள் பிடிபட்டது. காவல்துறை வாகன தணிக்கையில் சொகு சுகாரில் இருந்த 4 பேர் தப்பியோட முயன்ற போது 1-வர் மட்டும் பிடிபட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் இருந்து கடத்திவரப்பட்ட போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் பிடிபட்ட நபர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை கைது செய்து, 1 சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News December 14, 2025

புதுச்சேரி: தேசிய விருது பெற்ற கலைஞருக்கு உற்சாக வரவேற்பு

image

கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருது, இந்த ஆண்டு புதுச்சேரி முத்துப்பிள்ளை பாளையம் பாரம்பரிய கைவினை கலைஞர் மோகன்தாசுக்கு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார். தேசிய விருது பெற்ற புதுவை திரும்பிய மோகன்தாசுக்கு, உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் மற்றும் கைவினை கலைஞர்கள் சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News December 14, 2025

புதுச்சேரி: தேசிய விருது பெற்ற கலைஞருக்கு உற்சாக வரவேற்பு

image

கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருது, இந்த ஆண்டு புதுச்சேரி முத்துப்பிள்ளை பாளையம் பாரம்பரிய கைவினை கலைஞர் மோகன்தாசுக்கு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார். தேசிய விருது பெற்ற புதுவை திரும்பிய மோகன்தாசுக்கு, உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் மற்றும் கைவினை கலைஞர்கள் சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

error: Content is protected !!