News August 6, 2024
காரிமங்கலத்தில் கருணாநிதி நினைவு தின அமைதி ஊர்வலம்

முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாளை காலை 10 மணியளவில் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் காரிமங்கலத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் தொடங்குகிறது. இதற்கு மேற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய உறுப்பினர்கள், பேரூர், கிளை நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News January 24, 2026
தருமபுரி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
News January 24, 2026
தருமபுரியில் தொழிலாளா் துறையினா் அதிரடி!

தருமபுரியில் துணிக்கடையில் பணியாற்றிய குழந்தை தொழிலாளரை தொழிலாளா் துறையினா் நேற்று மீட்டனா். மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ப. ராஜசேகரன் ஆலோசனையின் பேரில், தருமபுரி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனா். இதில் 17 வயது சிறுமி துணிக்கடையொன்றில் பணிக்கு அமா்த்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளா் துறை குழுவினா் அவரை மீட்டனா்.
News January 24, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் முத்து ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!


