News October 8, 2024
காய்ச்சல் ஏற்படும் பகுதிகளில் தீவிர நடவடிக்கை

சென்னையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் எங்கெல்லாம் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்படுகிறதோ, குறிப்பாக ஒரு தெரு அல்லது ஊரில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக அங்கு மருத்துவ முகாம் நடத்த உத்தரவிட்டு மருத்துவ முகங்கள் நடைபெற்று வருகிறது. அரசுக்கு உதவியாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மருத்துவ முகாம் நடத்தி வருகின்றன” என்றார்.
Similar News
News November 17, 2025
சென்னை: கணவர் ஓட்டிய கார் மோதி மனைவி பலி

ஆவடியை சேர்ந்த கோனாம்பேடு, ரெட்டிபாளையம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜா- திவ்யா தம்பதி. ராஜா புதிதாக கார் ஓட்டி பழகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு காரை பார்க்கிங் செய்ய வீட்டின் பின் புறம் நிறுத்த முயன்றுள்ளார். அப்போது கணவர் ராஜா பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியாதல் திவ்யா மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 17, 2025
சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்! பள்ளிக்கு விடுமுறையா?

சென்னையில் இன்று (நவ.17) மிககனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் சென்னையில் மழையின் தாண்டவத்தை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


