News August 19, 2024

காதல் ஜோடியை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறித்த 4 பேர் கைது

image

தஞ்சையை சேர்ந்த தமிழரசன்(24) என்பவர், தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சை -திருவையாறு புறவழி சாலையில் சென்றுள்ளார். அப்போது, தமிழரசன் மற்றும் அவரது காதலியை வழிமறித்த 4 நபர்கள், அவர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் ரூ.3,000 பறித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக கள்ளப் பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபு, மணிகண்டன், சார்லஸ், வல்லரசன் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

Similar News

News January 22, 2026

தஞ்சாவூர்: குரூப் 2, 2-ஏ மாதிரித் தேர்வு அறிவிப்பு

image

“தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் குரூப் 2, 2-ஏ முதன்மை தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு ஜனவரி 24, 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜன.23-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 04362-237037 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.” என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

News January 22, 2026

தஞ்சைக்கு 1.80 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை!

image

தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த 2025-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.80 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள முதன்மையான சுற்றுலாத் தலங்களில் தஞ்சாவூரும் ஒன்றாக மாறியுள்ளது. இதில், அதிகபட்சமாக 2025 பிப்ரவரியில் 20.36 லட்சம் பேரும், மே மாதத்தில் 16.91 லட்சம் பேரும், டிசம்பரில் 16.74 லட்சம் பேரும், மார்ச்சில் 16.40 லட்சம் பேரும் வந்து சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

News January 22, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு 10 முதல் இன்று (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!