News August 6, 2024

காஞ்சி மாநகராட்சி அலுவலர் வீட்டில் சோதனை

image

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு பிரிவு அலுவலராக பணிபுரிபவர் சியாமளா. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதுகுறித்து, நேற்று மாவட்ட லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இன்று காலை 6 மணி முதல் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 15, 2026

காஞ்சி : CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News January 15, 2026

காஞ்சி மக்களே.. இனி டிரைவிங் கிளாஸ் இலவசம்!

image

காஞ்சிபுரத்தில் வசிப்பவர்கள், தமிழக அரசின் ‘TN skils’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TNSDC) மூலம் வழங்கப்படும் இந்த பயிற்சிக்கு <>இங்கே கிளிக் <<>>செய்து இணையதளத்தில் பதிவு செய்யலாம். இது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஒரு வாய்ப்பாகும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 15, 2026

காஞ்சிபுரம்: பொங்கலன்று மின் தடையா..? CLICK HERE

image

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்க காஞ்சிபுரம் மின்சார வாரியம் உறுதி பூண்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் மின் இணைப்பு எண்ணைக் கூறினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் பிரச்னையை சரிசெய்வார். பொங்கல் ஒளிமயமாக அமைய மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!