News November 19, 2025
காஞ்சி: தாய் கண் எதிரே மகன்கள் கொடூர பலி!

காஞ்சிபுரம் அடுத்த கீழ்அம்பி ஆதிதிராவிடர் காலணியைச் சேர்ந்த குளோரி, அவரது மகன்களான யுவராஜ், (18) சந்தோஷ், (16) ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு 7 மணியளவில் கீழ்அம்பி பகுதியில் உள்ள சந்தையில் காய்கறிகள் வாங்கிவிட்டு ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில், சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் யுவராஜ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
Similar News
News January 12, 2026
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு!

தமிழ்நாடு மதுபானம் (உரிமம் & அனுமதி) விதிகள் 1989 விதி 23 நிபந்தனைகளின் படி, திருவள்ளுவர் தினம் (16.01.2026, வெள்ளிக்கிழமை) குடியரசு தினம் (26.01.2026, திங்கள் கிழமை) ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும், என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைசெல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
காஞ்சிபுரம்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

காஞ்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News January 12, 2026
காஞ்சிபுரம் முழுவதும் 7 வட்டாட்சியர்கள் மாற்றம்!

காஞ்சிபுரம் தாசில்தார் ரபீக் இருங்காட்டுக்கோட்டை நில எடுப்பு பிரிவு தனித் தாசில்தாராக தற்போது மாற்றம். உத்தரமேரூர் தாசில்தாராக இருந்த ஆர்.சுந்தர் கேபிள் டிவிக்கு மாற்றப்பட்டு உள்ளார். பரந்தூர் விமான நிலைய தாசில்தார் நிலை எடுப்பு பிரிவு நடராஜன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உத்திரமேரூர் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர், இன்று (ஜன.12) உத்தரவிட்டுள்ளார்.


