News October 18, 2025
காஞ்சிபுரம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

காஞ்சிபுரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 8, 2025
காஞ்சி: இன்று ரேஷன் அட்டை திருத்த முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில் இன்று (நவ.8) ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த தாலுக்காவில் உள்ள கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகமாக நடக்கிறது. இதில் காரணங்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து ரேஷன் கார்டில் திருத்தம் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News November 8, 2025
காஞ்சி: மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்!

காஞ்சிபுரம், சாலவாக்கம், பள்ளிக்கூடம் தெருவில் வசிப்பவர் சேகர். இவரது மகன் சக்திவேல். தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், புதன்கிழமை வேலைக்குச் சென்றவர், வேலை முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பாமல், ஒரு மரக்கிளையில் பிணமாக தொங்கியபடி இருந்துள்ளார். சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவலளிக்கப்பட்டதன் பேரில், போலிசார் உடலை மீட்டு சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
காஞ்சிபுரம் நாளை ரேஷன் அட்டை திருத்த முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில் இன்று (நவ 8) ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் நீக்கம் செய்தல் முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த தாலுக்காவில் உள்ள கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகமாக நடக்கிறது இதில் காரணங்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து ரேஷன் கார்டில் திருத்தம் செய்து கொள்ளலாம்


