News November 30, 2024
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 ஏரிகள் 100% நிரம்பியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. பெஞ்சல் புயல் காரணமாக விடிய விடிய பெய்யும் கனமழையால் இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 7 ஏரிகள் 100 சதவீதமும், 67 ஏரிகள் 90 சதவீதமும்,107 ஏரிகள் 75 சதவீதமும்,143 ஏரிகள் 50 சதவீதமும், 56 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. மழை தொடர்வதால் இனி வரும் நாட்களில் நீர்மட்டம் மேலும் உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 9, 2025
காஞ்சி: லஞ்சம் கேட்டால் உடனே CALL

காஞ்சிபுரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27237139) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 9, 2025
காஞ்சி: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

காஞ்சிபுரம் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News December 9, 2025
காஞ்சி: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா?

காஞ்சி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவைகளுக்கு கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள <


