News August 9, 2025

காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய தகவல்

image

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 7, 2025

காஞ்சியில் தோண்ட தோண்ட கிடைக்கும் அதிசயம்!

image

காஞ்சிபுரம் நசரத்பேட்டை வேகவதி ஆற்றங்கரையோரம், அரசு அருங்காட்சியக காப்பாட் சியர் உமாசங்கர், வரலாற்று ஆய்வாளர் முனைவர் அன்பழகன் ஆகியோர் 16ம் நுாற்றாண்டு, விஜய நகரப் பேரரசு கால சதிகல் சிற்பத்தை நேற்று கண்டெடுத்தனர். இந்த சதிகல் சிற்பம் 25 செ.மீ., அகலம், 38 செ.மீ., உயரம் கொண்டது. தெற்கு திசை நோக்கி காணப்படும் இச்சிற்பத்தில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் உள்ளன.

News November 7, 2025

உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் பலி.

image

சிறுமையிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணப்பன். இவர், வீட்டில் 50-க்கும் மேற்பட்டவா்கள் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் கண்ணப்பன் நேற்று காலை வழக்கம்போல் வயல்வெளி பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச்சென்று மேய்த்து கொண்டு இருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் இருந்து மின்கம்பி ஒன்று அறுந்து இரண்டு எருது மாடுகள் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.

News November 7, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!