News November 14, 2025
கள்ளக்குறிச்சி: ஹோட்டலில் 32 கிலோ குட்கா!

கள்ளக்குறிச்சி: புதூர் கிராமத்திலுள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் நேற்று (நவ.13) உதவி ஆய்வாளர் சலாம் உசேன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அரசால் தடை செய்யப்பட்ட 32.5 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்த நிலையில், அவற்றை பறிமுதல் செய்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 9, 2025
சமூக நீதி விருந்துக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் பிரசாந்த் அழைப்பு

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான பெரியார் விருது’ கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான சமூக நீதி விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இந்த விண்ணப்பம், வருகின்ற டிச.18-ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களின் சாதனைகளை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
கள்ளக்குறிச்சி மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News December 9, 2025
கள்ளக்குறிச்சி: லஞ்சம் கேட்டால் உடனே CALL

கள்ளக்குறிச்சி மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04343- 292275) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


