News November 15, 2025

கள்ளக்குறிச்சி: ரோந்து பணி விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.14) இரவு முதல் இன்று (நவ.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 12, 2025

கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

image

அரசம்பட்டை பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள், குபேந்திரன் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். இவர்களுக்கிடையே இடப் பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதம் இருந்து வரும் நிலையில், அய்யம்மாள் வீட்டில் இருந்தபோது குபேந்திரன் தன்னுடைய இடத்தில் 2 அடி சேர்த்து கழிவறை கட்டியதாக கூறி, அய்யம்பாளை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News December 12, 2025

கள்ளக்குறிச்சி கலெக்டர் பங்கேற்கிறார்…!

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் ஏற்பாட்டில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று(டிச.12) காலை 10 மணி அளவில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்துகொள்கிறார்.

News December 12, 2025

கள்ளக்குறிச்சி: சிறுமியுடன் காதல் திருமணம்.. கணவருக்கு போக்சோ!

image

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், பிரியாணி கடையில் மேலாளராக பணியாற்றி வரும் வாலிபரும் ஒரு வருடமாக காதலித்து இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நிலையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இது தொடர்பாக மகளிர் ஊர் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில், குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!