News October 9, 2024
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்தியினை மாவட்ட கலெக்டர் பிரசாந்த், இன்று காலை 10 மணிக்கு கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். இதில், சமூக நலத்துறை அதிகாரிகள், மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Similar News
News November 17, 2025
கள்ளக்குறிச்சி: B.E/B.Tech படித்தால் ரூ50,000!

கள்ளக்குறிச்சி: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே<
News November 17, 2025
கள்ளக்குறிச்சி: ஏரியில் மிதந்த பிணம்! கொலையா?

கள்ளக்குறிச்சி: எலவனாசூர்கோட்டை, தளபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ரகமத்துல்லா (46). இவர் கடந்த 13ம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தார். தொடர்ந்து அவரது உடல் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது கொலையா? இல்ல விபத்தா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 17, 2025
கள்ளக்குறிச்சியில் மின்தடை! உங்க ஏரியா இருக்கா?

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் அடுத்த அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.18) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக அரியலூர், அத்தியூர், மையனூர், சீர்ப்பனந்தல், எடுத்தனூர், ஜம்படை, வாணாபுரம், பகண்டை கூட்டு ரோடு, ஏந்தல், பொற்பாலம்பட்டு, மணியந்தல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி – மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.


