News March 26, 2024
கள்ளக்குறிச்சி: மாரியம்மன் கோவில் தேரோட்டம்

திருக்கோவிலூர் அருகே உள்ள வடகரை தாழனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாதத் திருவிழா கடந்த 14 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
Similar News
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சம்மர் கேம்ப்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று (நவ.12) பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஈக்கோ பிரண்ட்லி சம்மர் கேம்ப் நடைபெறுகிறது. கோமுகி அணை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை நீக்குதல், சுற்றுச்சூழல்கள் பற்றிய விழிப்புணர்வு பேனர் பெயிண்டிங் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது. இதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும்.
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து போலீசார் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல், இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News November 11, 2025
பயிர் காப்பீடு திட்டம்-ஆட்சியர் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இவ்வாண்டில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா -2) மற்றும் உளுந்து பயிருக்கு நவம்பர் 15-ஆம் தேதி வரையில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.11) தெரிவித்துள்ளார். மேலும், தேவையான ஆவணங்களை பயன்படுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


