News November 26, 2025

கள்ளக்குறிச்சி: மனைவி திட்டியதால் தூக்கு மாட்டிய கணவன்!

image

கள்ளக்குறிச்சி: திருப்பாலப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (56). கூலித்தொழிலாளியான இவர், வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதை அவருடைய மனைவி பச்சையம்மாள் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன், நேற்று அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சாதனை வாழ்த்து துண்டு பிரசுரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் நல்வாழ்த்துகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு சாதனை வாழ்த்து துண்டு பிரசுரத்தினை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (ஜன.13) மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News January 13, 2026

குறள் வார விழாவையொட்டி நடைபெற்ற பரிசளிப்பு விழா

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குறள் வார விழாவையொட்டி (ஜன.09) கள்ளக்குறிச்சி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் பங்கு
பெற்ற குறள் வினாடி வினாவிற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (ஜன.13) திருக்குறள் புத்தகம் மற்றும் கேடயங்களை
வழங்கினார்.

News January 13, 2026

கள்ளக்குறிச்சி மக்களே ₹41,000 ஊதியத்தில் வங்கி வேலை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளமாக ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் <>இண்ட்பேங்க் <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு இந்த அறிய வாய்ப்பைப் பகிருங்கள்!

error: Content is protected !!