News November 3, 2025
கள்ளக்குறிச்சி: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க’
Similar News
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: 156 மாற்றுத்திறனாளிகள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று(நவம்பர் 11) மாசத்துக்கு நாளிதழ் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மாவட்டம் முழுவதும் இருந்து பங்கேற்ற நிலையில் 156 மாற்றுத்திறனாளிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட காவலர்கள் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 12, 2025
கள்ளக்குறிச்சியில் இனி இதற்கு அலைய வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பென்சந்தாரர்கள், தபால் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தவாறு ஆவணங்களை சமர்ப்பித்து உயிர் வாழ் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது அருகாமையில் உள்ள இ சேவை மையத்தை அணுகி, இணையவழியாக ஒரு முறை பதிவு செய்தால் போடுமானது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


