News August 5, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில், மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ரிஷிவந்தியம் அடுத்த சீர்பனாந்தல் கிராமத்திலும், திருக்கோவிலூர் அடுத்த விளந்தையிலும், திருநாவலூர் அடுத்த சேந்தமங்கலத்திலும், உளுந்தூர்பேட்டை அடுத்த திருப்பெயரிலும், கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடியிலும் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
கள்ளக்குறிச்சி மக்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., நீங்கள் புதிதாக தொழில் தொடங்க மத்திய அரசின் ‘முத்ரா தொழில் கடன்’ மூலம் ரூ.10 லட்சம் பெற முடியும். இதற்கு தேவையான ஆவணங்களுடன் அருகே உள்ள முத்ரா கடன் தரும் வங்கியை அணுகவும். அங்கு முத்ரா கடன் பெறுவதற்கான விண்ணத்தைப் பெற்று, உங்கள் தேவையான தொகை, விவரங்களை எழுதி சமர்ப்பிக்கவும். ஒரு மாதத்திற்குள் உங்களுக்கான தொகை வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படும். (SHARE IT)
News January 24, 2026
கள்ளக்குறிச்சியில் தலை நசுங்கி கொடூர பலி!

சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த பாப்பாள்(70) வேலை செய்து வந்தார். இந்நிலையில், சிமெண்டு கலவை கலக்கும் இயந்திரம் திடீரென பின் நோக்கி சென்ற போது பாப்பாள் மீது ஏறியது. இதில், தலை நசுங்கி கொடூரமாக பலியானார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்கு பந்திந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 24, 2026
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.23) இரவு முதல் நாளை (ஜன.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


