News August 7, 2024
கள்ளக்குறிச்சியில் விடிய விடிய கனமழை பெய்தது

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம், ஆலத்தூர், கச்சிராப்பாளையம், வடக்கனந்தல் பகுதிகளில் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். உங்க பகுதியில் மழை பெய்ததா?
Similar News
News November 11, 2025
கள்ளக்குறிச்சி: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
கள்ளக்குறிச்சி: விமான நிலையத்தில் வேலை வேண்டுமா?

12-ம் வகுப்பு/டிகிரி முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன் விமான நிலையத்தில் Cabin Crew, Air Cargo Introductory+ DGR உட்பட பல்வேறு பிரிவுகளில் பணி செய்ய வாய்ப்பை தாட்கோ ஏற்படுத்தி தருகிறது. இந்த 6 மாத பயிற்சிக்கான செலவுகளை தாட்கோ முற்றிலும் ஏற்கும். விண்ணப்பிக்க விரும்பும் 18 முதல் 23 வயதுடைய இளைஞர்கள் இங்கு <
News November 11, 2025
கள்ளக்குறிச்சி: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன், நேற்று (நவ.10) ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பில் இருந்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், தனது வீட்டினை இடிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தடை செய்வதுடன், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.


