News August 21, 2024

கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

image

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், கள்ளர், சீர் மரபினர் பள்ளிகள் இணைப்பதை கண்டித்து அதிமுக 24ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை. ஒரு முடிவை எடுத்த பின் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தலாம். கல்வியை வைத்து கருத்துகளை சொல்லுங்கள். ஆனால் கல்வியை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என்றார்.

Similar News

News November 11, 2025

திருச்சி இளைஞர் கொலை: குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு

image

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று இரவு ஒருவரை போலீசார் சுட்டுப் பிடித்த நிலையில், தலைமறைவாக இருந்த திருவானைக்காவலை சேர்ந்த நந்தகுமார், ரவுடி பிரபாகரன், கணேஷ் ஆகிய 3 பேர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது தவறி விழுந்ததில், மூவருக்கும் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News November 11, 2025

திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW

News November 11, 2025

திருச்சி: குடிநீர் விநியோகம் ரத்து

image

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி, மலைக்கோட்டை, மரக்கடை, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், அண்ணா நகர், காஜா பேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், திருவெறும்பூர், சந்தோஷ் நகர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.12) ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது என்றும், நாளை மறுதினம் (நவ.13) வழக்கம் போல குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!