News February 24, 2025

கல்லூரி மாணவர்களிடம் விற்க முயன்ற கஞ்சா பறிமுதல்

image

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ஆக்ஸ்போர்ட் இன்ஜினியரிங் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தோஷ்குமார், ருக்குமன் ஆகிய இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தனர். உடனே போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து, ரூபாய் 2000 மதிப்புள்ள 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News

News July 11, 2025

புத்தாநத்தம்: மின்சாரம் பாய்ந்து மின்பாதை ஆய்வாளர் பலி

image

புத்தாநத்தம் கடைவீதியில் உள்ள மின்மாற்றியில் இன்று மின்பாதை ஆய்வாளர் ஜேம்ஸ் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 11, 2025

திருச்சி: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.36,900 முதல் ரூ.1.16 லட்சம் வரை வழங்கப்படும். அரசு ஆசிரியர் வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க! (மேலும் தகவலுக்கு-<<17029471>>பாகம் 2<<>>)

News July 11, 2025

திருச்சி: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

image

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே <<>>க்ளிக் செய்யவும்
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்

error: Content is protected !!