News November 22, 2024
கலைஞர் கடன் உதவித் திட்டத்தில் கடனுதவி

திண்டுக்கல் மாவட்டம் “கலைஞர் உதவித் திட்டத்தில்” குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில்கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி), நாகல்நகர், திண்டுக்கல்-624003 (தொடர்பு எண் 0451-2433351, 9080765150) தாய்கோவங்கி, ஒட்டன்சத்திரம் தொடர்பு எண் 04553-244040, 9629098842) தெரிந்து கொள்ளலாம் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

இணையத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலர் காதல் பேச்சு, நட்பு எனப் போலி சுயவிவரங்கள் மூலம் நம்பிக்கை பெற்று பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஏமாற்றத்துக்கு ஆளானால் உடனே 1930 எண்ணை அழைக்கவும் www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 12, 2025
திண்டுக்கல்லில் ரூ.61 லட்சம் மோசடி!

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே விவசாய நிலம் விற்பதாக கூறி, கரூரைச் சேர்ந்த வக்கீல் தனசேகரனிடம் ரூ.61 லட்சம் மோசடி செய்ததாக சத்தியமூர்த்தி, ஹேமலதா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, பெண் உள்பட இருவரை கைது செய்தனர். ரூ.75 லட்சத்தில் நிலம் விற்பதாக கூறி முன்பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
News November 12, 2025
திண்டுக்கல் மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்கள் விபரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நவம்பர் 11 இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனியை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,


