News November 18, 2024
கரை ஒதுங்கிய மாணவர்களின் உடல்கள்

மாமல்லபுரம் கடலில் குளித்து மாயமான அண்ணா நகரைச் சேர்ந்த கிரிஷ் கேசவ், ரிஸ்வான் ஆகிய 2 பேரின் உடல்கள் நேற்று கரை ஒதுங்கின. உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர் கண்ணீர் விட்டு கதறினர். கடந்த 16ஆம் தேதி நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கடலுக்கு அடித்துச் செல்லப்பட்ட இருவரும் உடலையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வந்த நிலையில், நேற்று அவர்களது உடல்கள் கரை ஒதுங்கின.
Similar News
News December 6, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 6, 2025
சென்னை-பெங்களூர் இடையே சிறப்பு ரயில்

தெற்கு ரயில்வே பயணிகள் நெரிசலை குறைக்க நாளை பெங்களூரு–சென்னை இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. காலை 08.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் 06255 ரயில், மதியம் 14.45 மணிக்கு எழும்பூர் அடையும். மாலை 15.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் 06256 ரயில், இரவு 22.45 மணிக்கு பெங்களூரு அடையும்.
News December 6, 2025
சென்னை: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீரை கொதிக்க வைக்கும் எலக்ட்ரிக் கெட்டில் பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் செல்போன் சார்ஜ் பாயிண்ட்களை தவறாக பயன்படுத்தி கெட்டில் மூலம் டீ, காபி போடுவதாக புகார் எழுந்தது. ரயில்களில் கெட்டில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


