News August 22, 2025
கரூர்: விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை

கரூர்: குளித்தலை சப்-கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக அரசு அலுவலர்கள், ஹிந்து அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார், குளித்தலை கிருஷ்ணராயபுரம் தாசில்தார்கள் நீதிராஜன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Similar News
News January 24, 2026
கரூரில் மின்தடை அறிவிப்பு!

கரூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (ஜன.27) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை, சீத்தப்பட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவணை, விராலிப்பட்டி, மைலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, மாவத்தூர், செம்பியநத்தம், சக்கரக்கோட்டை, குருணிகுளத்துப்பட்டி, மஞ்சபுளிபட்டி, பணிக்கம்பட்டி, எரமநாயக்கன்பட்டி, வளையப்பட்டி, வலையபட்டி, மருதூர், மேட்டுப்பட்டி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News January 24, 2026
கரூரில் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை உட்கோட்டம் நங்கவரம் மற்றும் மாயனூர் காவல் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் நங்கவரம் வாரிக்கரையில் மது விற்ற சங்கர், மாயனூர் முடக்கு சாலை சுடுகாடு அருகே மது விற்ற சரவணன் ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் 52 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
News January 24, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களை தடுக்கும் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவசர நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.


