News October 19, 2025

கரூர்: ரேஷன் கடைகள் தற்போது பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்

image

கரூரில் தற்போது வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

கரூரில் வசமாக சிக்கிய இருவர்!

image

கரூர் மாவட்டம் பொய்கைபுத்தூர் கடைவீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த காமராஜர் (60) மற்றும் தங்கராஜ் 64 ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.

News December 14, 2025

கரூர்: விசாரணை வளையத்தில் விஜய்!

image

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விஜயிடம் விரைவில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இந்தநிலையில் விஜயிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News December 14, 2025

கரூரில் உயிரைக் பறித்த ‘மிஸ்டரி’ வாகனம்!

image

கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பெரிய காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (60); இவர் கடந்த, 11ம் தேதி இரவு குப்புச்சிப்பா ளையம் பகுதியில், சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடை யாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த காமராஜ், நேற்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இது இதுகுறித்து காமராஜ் மகன் ஜோதிவாசன் (32) கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!