News August 19, 2024
கரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இரவு 7 மணி வரை கரூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
Similar News
News January 25, 2026
குளித்தலை: வாலிபர் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் தமிழ்ச்சொலையைச் சேர்ந்தவர் செல்வகுமார் (36). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மதியம் ஒரு மணி அளவில் வயிறு வலியால் துடித்துக் கொண்டிருந்தவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் 10க்கும் மேற்பட்ட ஆணிகளை முழுங்கியது தெரிய வந்தது. தொடர் சிகிச்சையில் அவர் உயிரிழந்தார்.
News January 25, 2026
குளித்தலை அருகே 6 பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டம் பாலவிடுதி, லாலாபேட்டை, நங்கவரம், சிந்தாமணிப்பட்டி, தோகைமலை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற தங்கராசு 60, மலர் 49, ரேவதி 55, பழனிவேல் 47, ராமசாமி 60, சின்னத்தம்பி 47 ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 152 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
News January 25, 2026
கரூர் : VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கரூர் மாவட்ட மக்கள் 04324225100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


