News November 25, 2025
கரூர் மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கரூர் அருகே தளவாபாளையம் எம்.குமராசாமி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நாளை (26ம் தேதி) சிறப்பு கல்வி கடன் முகாம் காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் மாணவர்கள் பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு, வருமான சான்றிதழ், கல்லூரியில் சேர்ந்ததற்கான ஆதாரம் முதலான ஆவணங்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
கரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கரூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் 3)விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
கரூர்: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

கரூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News January 24, 2026
கரூர் அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை!

கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலை அருகே கணேசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். மேலும் இவர் மாற்றுத்திறனாளி மஞ்சள் காமாலை நோயினால், சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மனம் விரக்தியில் மதுவுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பம் குறித்து தான்தோன்றி மலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரி மேற்கொண்டனர்.


