News October 11, 2025

கரூர்: பெண்ணின் வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸிற்கு மிரட்டல்!

image

கரூர்: தளவாபாளையம் அருகே கிழக்கு தவிட்டுப்பாளையம் தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(40). இவரது மனைவி ஜெயலட்சுமி(36) 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பவர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 7, 2025

ஊரக திறனாய்வு தேர்வு:1,706 மாணவ, மாணவியர் பங்கேற்பு!

image

கரூர்:தமிழக அரசு தேர்வு இயக்ககத்தால்,ஊரக பகுதிகளில், 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு,ஊரக திறனாய்வு தேர்வு,1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது.வெற்றி பெறும் மானவர்களுக்கு ஆண்டிற்கு,1,000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.கரூர் மாவட்டத்தில்,9 மையங்களில்,1,811 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.அதில்,மொத்தம்,1,706 மாணவ,மாணவியர் தேர்வெழுதினர்.105 பேர்தேர்வுஎழுதவரவில்லை.

News December 7, 2025

கரூரில் சேவல் சண்டை; 2 பேர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வயலூர் நடுப்பட்டி சாலையில் கழுவூரான் தோட்டம் அருகே உள்ள சீத்தகாட்டில் அரசு அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் சேவல் சண்டை நடத்திய காதப்பறையை சேர்ந்த பழனிவேல், வாத்தி கவுண்டனூரைச் சேர்ந்த தர்மராஜன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 6 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

News December 6, 2025

கரூர்: 4 வயது சிறுவன் கிணற்றில் விழ்ந்து பலி

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனின் நான்கு வயது மகன் சுஜன், நண்பர்களுடன் ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள திருப்பதி என்பவரின் விவசாய கிணற்றில் மீன்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது தவறிவிழ்ந்து உயிரிழந்தார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். நங்கவரம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வருகின்றனர்.

error: Content is protected !!