News October 19, 2025
கரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News December 11, 2025
கரூர்: ரூ.18,000 சம்பளத்தில் ஆசிரியர் வேலை! APPLY NOW

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் <
News December 11, 2025
கரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கரூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 11, 2025
அரவக்குறிச்சி: மன விரக்தியில் விபரீத முடிவு!

அரவாக்குறிச்சி பகுதியில் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை செய்த மணி, கடந்த இரண்டு வருடங்களாக கழுத்து வலி சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று, வலியால் மன விரக்தியில் இருந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரவாக்குறிச்சி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.


