News September 28, 2025

கரூர் துயரம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

image

கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி அரசு வழங்க வேண்டும். கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை, உடனடியாக யாரையும் குறை கூற முடியாது. தீவிரமாக விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்” என பாஜக மாநில தலைவர் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 15, 2025

நெல்லை: மகனை இழந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

image

களக்காடு அருகே சவளைக்காரன் குளத்தைச் சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் மகன் அபின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் ஆறுமுக பெருமாள் மன வேதனையுடன் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சவளைக்காரன் குளம் இடுகாட்டில் உள்ள தனது மகனின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News November 15, 2025

நெல்லை: பதக்கங்களை குவித்த அரசுப் பள்ளி மாணவன்

image

மாநில அளவிலான வில்வித்தை போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற நெல்லை, வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஊ.லெபின் சுதர்ஷன் மாநில அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார். அவரை தலைமை ஆசிரியர் டேனியல் கிப்சன், பொறுப்பாசிரியர் இராஜேஷ்வரி. வகுப்பு ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.

News November 15, 2025

ஆசிரியர் தகுதி தேர்வு: 9.30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது

image

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் 15 மற்றும் 16ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெறுகின்றன தேர்வு காலை 9.30 மணிக்கு மேலாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். அதன் பின்னர் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் தேர்வு பனியில் சுமார் 1300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!