News April 4, 2025
கரூர்: தனியார் பஸ் மோதி இளைஞர் உயிரிழப்பு

கரூர் அருகே கணேசபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (27). இவர் நேற்று கரூரில் இருந்து புலியூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரில் குளித்தலையில் இருந்து, கரூர் நோக்கி வந்த தனியார் பஸ் ராம்குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 14, 2026
கரூர்: வாங்கல் சாலையில் விபரீதம்!

கரூர் மாவட்டம், அருகே வாங்கல் சாலையில், வரதன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென நாய் ஒன்று குறுக்கே சென்றதில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலை மற்றும் கால் பகுதியில், பலத்த காயமடைந்து மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வாங்கல் போலீசார் விபத்து குறித்து விசாரணை!
News January 14, 2026
கரூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi’ சொல்லுங்க

கரூர் மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும்.இதனை ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
கரூர்: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்!

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்;கூடுதல் விவரங்களுக்கு <
அல்லது அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகத்தை அணுகவும்.


