News August 19, 2024

கரூர்: ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

image

குளித்தலை அடுத்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது அக்கா புஷ்பா சேப்பளப்பட்டியில் வசித்து வருகிறார். புஷ்பா நேற்று தனது 2 குழந்தைகள் மற்றும் கொழுந்தனாரின் மகன் சஞ்சித் (9) ஆகியோருடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் ராஜேந்திரம் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது சஞ்சித் தண்ணீரில் மூழ்கி உயிரிசந்துள்ளார். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 21, 2026

குளித்தலை முன்னாள் எம்எல்ஏ காலமானார்!

image

குளித்தலை முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வெள்ளியணை ராமநாதன், வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவர் 1962 ஆம் ஆண்டு தமது 26 வயதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நின்றபோது அதிக வாக்கு வித்தியாசத்தில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-ல் கருணாநிதி முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற வேட்பாளராக நின்ற போது வெள்ளியணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

News January 21, 2026

கரூா் -சேலம் வழித்தட ரயில்களின் சேவையில் மாற்றம்

image

பொறியியல் பணிகள் காரணமாக, கரூா் – திருச்சி பயணிகள் ரயில் (76810), மறுமாா்க்கமாக திருச்சி – கரூா் பயணிகள் ரயில் (76809), திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் (56105), மயிலாடுதுறை – சேலம் விரைவு ரயில் (16811), மறுமாா்க்கமாக சேலம் – மயிலாடுதுறை விரைவு ரயில் (16812), ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் (56810) ஆகிய ரயில்கள் வரும் 27 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

JUST IN: கரூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும், வருகிற 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். இக்கூட்டங்களில் ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை மற்றும் கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!