News August 24, 2025
கரூர்:குழந்தைகளுக்கு மாதம் 2000 அறிவித்தார் கலெக்டர்!

பெற்றோரை இழந்த குழந்தைகள் பாதுகாத்திடும் வகையில் அவர்களது பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, 18 வயது வரை மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கல்லூரி கல்வி மற்றும் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் பயன் பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவரிடம் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். SHARE பண்ணுங்க
Similar News
News January 13, 2026
கரூர்: பெண்ணை அதிரடியாகக் கைது செய்த போலீசார்!

கரூர் மாவட்டம் கூடலூர் பனையம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மகேஸ்வரி சக்தி (42). இவர் அப்பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சின்னதாராபுரம் போலீசார் மது விற்ற மகேஸ்வரி சக்தி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
News January 13, 2026
கரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
News January 13, 2026
கரூரில் களைகட்ட போகும் ஜல்லிக்கட்டு!

கரூர் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டிக்கு, நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். வரும், 17ல் பொங்கல் பண்டி-கையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதில், மாடுபிடி வீரர்கள் மற்றும் பங்கேற்கும் காளைகளுக்கான பதிவுகளை karur.nic.in என்ற இணையதளம் மூலம் நாளை காலை 8:00 மணி முதல் 16ம் தேதி காலை 8:00 மணி வரை இணையவழி பதிவுகள் மேற்கொள்ளலாம் என அறிவிப்பு!


