News February 24, 2025

கன்று வீச்சு நோய் தடுப்பூசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கன்று வீச்சு நோய் தடுப்பூசி ஏற்கனவே கன்றுகளுக்கு 4 கட்டங்களாக போடப்பட்டுள்ளது. தற்போது ப்ரூசெல்லோசிஸ் தடுப்பூசி 5 ஆம் கட்டமாக வரும் 20 பிப்ரவரி முதல் 19 மார்ச் வரை கரூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் போடப்படவுள்ளது. இத்தடுப்பூசி 4-8 மாத வயதுடைய பெண் கன்றுகளுக்கு மட்டுமே போடப்பட வேண்டும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் இன்று அறிவிப்பு.

Similar News

News July 9, 2025

இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி!

image

கரூரில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு உதவ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். 18 முதல் 35 வயதுக்குள் உள்ள, வேலை தேடும் இளைஞர்களுக்கு தொழில்துறை சான்றிதழுடன் கூடிய இலவச குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்யவும்.

News July 9, 2025

ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

image

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, கரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17007892>>(தொடர்ச்சி 1/2)<<>>

News July 9, 2025

திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

image

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!