News July 11, 2024
கன்னியாகுமரி அருகே ரயில் தடம் புரண்டது

குமரியிலிருந்து திப்ரூகர் செல்லும் விவேக் விரைவு வண்டி நாகர்கோவிலில் தடம் புரண்டது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஜினை பெட்டியில் இணைக்கும் போது ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டுள்ளது. ரயிலில் அச்சமயம் பயணிகள் யாரும் இல்லை. பராமரிப்புக்காக எடுத்துச் செல்லும் போது ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டுள்ளது – திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கம்
Similar News
News July 10, 2025
கன்னியாகுமரியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வங்கி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
News July 9, 2025
வளமான வாழ்வு பெற கேரளபுரம் விநாயகரை வழிபடுங்க!

புதன் அன்று வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். நமது கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக விநாயகர் அருள்பாலிக்கிறார். தை – ஆனி மாதத்தில் வெள்ளை நிறத்திலும், ஆடி – மார்கழி வரை கருப்பு நிறத்திலும் விநாயகர் நமக்கு காட்சியளிப்பார். கேரளபுரம் விநாயகரை மனதார பிரார்த்தனை செய்தால் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கொடுக்கும் அற்புத திருத்தலம். SHARE பண்ணுங்க!
News July 9, 2025
ரெஜிமோன் மத போதகர் குறித்து Whatsappல் புகார் அளிக்கலாம்

கன்னியாகுமரி, தக்கலை அருகே 26 வயது இளம்பெண் ஒருவர் ஜெபக்கூடத்திற்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ரெஜிமோன் என்பவர் கைது செய்யபட்டுள்ளார். போதகர் மீது வழக்கு பதிவு செய்யபட்ட நிலையில் வேறு யாராவது பாதிக்கபட்டிருந்தால் பெண்கள் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க தேவையில்லை மாவட்ட எஸ்பி whatsapp எண்ணுக்கு 8122223319 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.