News October 12, 2025
கன்னியாகுமரியில் 25 ரவுடிகள் கைது

குமரி மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் உள்ள ரவுடிகளை கைது செய்ய எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அக்.10 அன்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி செல்வம் என்ற செல்வமுருகனை (39) கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர். செல்வம் உட்பட 25 ரவுடிகளை கடந்த 5 நாட்களில் குமரி மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 12, 2025
நாகர்கோவில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த பை

ஜம்முதாவிலிருந்து இன்று (டிச.12) அதிகாலை ஒரு மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இரண்டு பைகள் அனாதையாக கிடந்தது. அதனை ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனை செய்த போது அதில் ஐந்து கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News December 12, 2025
குமரி மக்களே ரேஷன் கார்டு இருக்கா.. முக்கிய அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டு சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (டிச.13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு செய்தல் போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். எல்லோரும் இதை தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.
News December 12, 2025
குமரி: அழுகிய நிலையில் டிரைவர் சடலமாக மீட்பு

மணக்காவிளை வெள்ளைப் பாறையடி பகுதி டிரைவர் கிறிஸ்டோபர் (53). 8 மாதங்களுக்கு முன்பு இவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளுடன் இவரை விட்டு பிரிந்து சென்றார். வீட்டில் கிறிஸ்டோபர் தனியாக வசித்து வந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து (டிச.10)ம் தேதி இரவு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர் தக்கலை போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு சென்று அழுகிய நிலையில் உடலை கைப்பற்றினர்.


