News November 25, 2025

கனமழை.. பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

image

கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, *அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடுவது & மிதிப்பது தவிர்க்கவும். *மின் கம்பம் அருகில் செல்வதையோ & தொடுவதையோ தவிர்க்கவும். *தெரு மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் நடப்பதை தவிர்க்கவும்.

Similar News

News January 15, 2026

உங்கள் மனம் கவர்ந்த பொங்கல் ரிலீஸ் எது?

image

பொங்கல் திருநாள் என்றாலே கரும்பு, சர்க்கரை பொங்கல், புத்தாடையுடன் புதுப்படங்களும் தமிழர்களின் வாழ்வில் இணைந்துவிடும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் ஜன நாயகன் ரிலீஸாகவில்லை. எனினும் சிவகார்த்திகேயனின் பராசக்தி, கார்த்தியின் வா வாத்தியாரே, ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் ஆகியவை பொங்கல் ரீலிசாக வெளிவந்துள்ளன. இவற்றில் எந்த படத்தை பார்த்தீர்கள்? எது உங்களின் மனம் கவர்ந்தது? கமெண்ட் பண்ணுங்க..

News January 15, 2026

மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

image

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க தினமும் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பழத்தில் பொட்டாசியம் & மக்னீசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News January 15, 2026

தமிழகத்தின் புதிய ஜல்லிக்கட்டு மைதானம்!

image

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில், ₹3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை DCM உதயநிதி இன்று திறந்து வைத்தார். அவர் பேசுகையில், திருச்சிக்கு மலைக்கோட்டை, காவிரி ஆறு எப்படி அடையாளமோ, அதே போன்று சூரியூர் ஜல்லிக்கட்டும் ஒரு அடையாளம் என்றவர், இதுவரை மந்தையில், குளத்தில் நடந்த சூரியூர் ஜல்லிக்கட்டு நாளை ஜன.16 முதல் இந்த நிரந்தர அரங்கில் நடைபெறும் என அறிவித்தார்.

error: Content is protected !!