News May 2, 2024

கணவன் மனைவியை கத்தியால் குத்திய முகமூடி மனிதர்கள்

image

உசிலம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சங்கர்(44). நேற்றிரவு இவரது மனைவி ராஜம்மாளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் கதவைத் தட்டி வீட்டிற்குள் நுழைந்து, கத்தியால் கணவன் மனைவியை குத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். மர்ம நபர்கள் குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 11, 2025

மதுரை: ஜப்தி செய்யப்பட்ட கார்; இளைஞர் தற்கொலை.!

image

மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (30) சொந்தமாக கார் வாங்கி ஓட்டுவதற்காக, கே.கே. நகரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கினார். அதற்கு கடந்த 6 மாதமாக தவணை கட்டாததால் பைனான்ஸ் அதிகாரிகள் காரை ஜப்தி செய்து விட்டனர். இதன் காரணமாக மனமுடைந்த கார்த்திக் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
செய்து கொண்டார். சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 11, 2025

மதுரையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு.

image

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்கமாக இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

மதுரை: வாக்காளர்களே இன்றே கடைசி.. செக் பண்ணுங்க

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!