News August 8, 2025

கடையநல்லூர் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

image

கடையநல்லூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. குறைந்தபட்ச கல்லித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூர் என்ற முகவரியிலும் 04633-290270 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 8, 2025

தென்காசி: காவலர் தேர்வு நேரக்கட்பாடுகள் விவரம்!

image

தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள(நவ9) இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு நடக்கிறது. தேர்வு நடைபெறும் மையத்திற்குள் காலை 8 மணி முதல் 9.30மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும்9.30 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எஸ் பி அரவிந்த் தெரிவித்தார். SHARE!

News November 8, 2025

தென்காசி: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களு<>டன் eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

தென்காசி: சிறுவனை கடித்த தெரு நாய்

image

கடையநல்லூர் நகராட்சி, கிருஷ்ணாபுரம் கோகுல் நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் நேற்று காலை வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தபோது அப்பகுதியில் சில தெருநாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுள்ளது. அப்போது ஒரு வெறி நாய் அங்கு இருந்த சிறுவனின் வலது கையில் கடித்தது. சிறுவனுக்கு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

error: Content is protected !!